Sunday, December 9, 2012

இயற்கை அன்னை

கூந்தல் வருடும் தென்றல்
குற்றம் காணா தண்ணீர்
ஏந்தி சீராட்டும் பூமி
எப்போதும் விலகாத வானம்
அந்தி சிவப்பில்
அழகு காட்டும் கதிரவன்
வந்து இரவில் தாலாட்டும் சந்திரன்
அத்தனையும் நம்மை ஒன்றாய்
அணைக்கும்
இணைக்கும்
இயற்கை அன்னையின்
எழில் முகங்கள் அல்லவா!

-ஸ்ரீ சக்திப்ரியன்