Friday, August 5, 2011

ஓரே ஒரு முறையேனும்

கண்ணும் கண்ணும்
கருத்தும் கருத்தும்
கலந்து உண்டாகி
விழுந்த விதை
அது
ஆசை பூமியின் முகட்டை பிளந்து
உள்ள வெளியில்
தளிராய் துளிர்த்து
செடியாய் வளர்ந்து
உறுதி கொண்டு
கிளைகள் விரித்து
பருவம் எய்தி அடர்த்தியாய்
பச்சை மேலாடை போர்த்தி
மேலும் உறுதியாய்
மரமாய் வளர்ந்து நிற்குதடீ!

இயற்கை சீற்றத்தினாலோ
பருவ மாற்றத்தினாலோ
வேர் தளர்ந்து வீழ்வதன் முன்னம்
நீ
ஒரே ஒரு முறையேனும்
அதன் நிழலில் வந்து
இளைப்பாறிவிட்டுச் செல்லேன்.

-சக்திப்ரியன்